Thursday, June 12, 2008

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்


ஒரு காதலனின் கற்பனையில் உருவான
காதலியின் பிறந்த நாள் வாழ்த்து செய்தி

1.இன்று என்ன வருடத்தின்
பெளர்ணமி நாளா
உலகமே உன்னை போல்
முழு நிலவாய் தெரிகிறதே

2. இருபத்திநான்கு ஆண்டுகளுக்கு
முன்பு பிரம்மன் பூமியின் மீது
எய்த பிரம்மாஸ்திரம் நீ

3.இளையராஜாவின் இசை,
ரவிவர்மாவின் ஓவியம்,
வைரமுத்துவின் கவிதை,
எல்லாவற்றிலும் ஒளிந்து
கொண்டிருக்கிறது உன் அழகு

4.நான் உலகாளும் மன்னன்
ஆனால் உலக விடுமுறை நாள்
இந்த நாளாக இருக்கும்

5.மழைக் காலம்,
இலையுதிர்காலம்,
கார்காலமெல்லாம்,
எந்த மாதமென்று எனக்குத் தெரியாது…
நீ பிறந்த மாதம் அழகுக்காலம்!

6.எல்லோரும் பிறந்த நாளுக்கு
கோவிலுக்கு செல்வார்கள்
என் தெய்வமே நீ எங்கு செல்வாய்

7.தன்னுடைய படைப்பு இலக்கணத்தின்
மீது மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை
தீர்ப்பதற்காக பிரம்மன் உருவாக்கிய
அழகு என்னும்பொருளின் எடுத்துக்காட்டு நீ

8. குழந்தைகள் தினம்,
ஆசிரியர் தினம் ,
காதலர் தினம் போல
இன்று என்ன
அழகு பெணின்
பிறந்த தினமா....(அழகி தினம்)

9. நீ கருவில் உருவாகும் போது
சரஸ்வதி தேவி வீணையின்இசை
உன் காதில் கண்டிப்பாக
கேட்டிருக்க வேண்டும்
ஆதலால் உனக்கு மட்டும்
இவ்வளவு அறிவு

10.உன்னை படைக்கும் போது பிரம்மன்
உச்சகட்ட சந்தோஷத்தில்
இருந்து இருக்கவேண்டும்
ஆதலால் தான் உனக்கு மட்டும்
இவ்வளவு அழகு

11.கர்ணணுக்கு கவசமும்
குண்டலும் போல
இந்த நூற்றாண்டில் பிரம்மனின்
மிக சிறந்த கண்டுபிடிப்பு
உனது அழகும் பொறுமையும்
12.எனக்கு மட்டும் வருடத்திற்கு
இரண்டு பிறந்த நாள்
உன் ஓவ்வொரு பிறந்த நாளிலும்
நான் புதிதாய் பிறக்கின்றேன்

13.ஒரு நாணயத்துக்கு
இரண்டு பக்கங்கள் போல
உனக்கு அழகும் அறிவும்

14. உன் பிறப்புக்கு பின்னால்தான்
பெண் குழந்தைகளை கொல்வது
சட்டபடி குற்றம் என்று
சட்டம் இயற்ற பட்டது

15.உன்னை தவிர உனக்கு
முன்னால் பிறந்த பெண்களும்
பின்னால் பிறந்த பெண்களும்
ஏதோ ஒரு விதத்தில் அழகில்
ஊனமாய் பிறந்து கொண்டு இருக்கிறார்கள்
16.எத்தனையோ எழுதிவிட்டேன்
உன்னை பற்றி ஆனால் ஒன்று கூட
உன்னை போல் அழகாய் இல்லை

Wednesday, June 4, 2008

இதயத்தின் வலி

உன் கண்ணிரில் கரைந்தது
ரோஜாவின் வர்ணம் மட்டுமல்ல
நீ ஏற்க்க மறுத்த என் காதலும் தான்........

உன் தலையில் சூடுவாய் என நினைத்தேன்
உன் கண்ணிரிலே கரைத்துவிட்டாயடி
நான் ஒண்ணும் சாயம் வெளுக்கவில்லை
உன் கலங்கிய கண்களை பார்த்து
நான் வடித்த ரத்த கண்ணீர் கூட
உன் மீதான என் காதலை சொல்கிறதுபார்........

நீ வேண்டாம் என நிராகரித்த
சாயம் வேளுத்த ரோஜா தான் நான்
மலரும் ஓவ்வொரு மலருக்கும்
மணமேடையில் இருக்க ஆசைதான் அது
மயாணத்துக்கு போவது
மலரின் குற்றம் அல்ல

எப்படியடி உன்னால் மட்டும் முடிகிறது
ரோஜா இதழில் இருந்து கூட ரத்தம் சிந்தவைக்க.

உன் கண்களுக்கு மட்டும் தான் சக்தி
உண்டு என்று எண்ணினேன்
" உன் கண்ணிருக்கு கூட உள்ள சக்தியை பார் "

Thursday, May 1, 2008

நீ கோலம் போடுகிறாய்

நீ உன்வீட்டு வாயிலின் தண்ணீர் தெளிக்கிறாய்
பூமி எங்கும் மழை பொழிகிறது .........
கோலம் போடுவதற்காக புள்ளி வைகிறாய்
வானம் எங்கும் நட்சத்திரம் மின்னுகிறது..........
வைத்த புள்ளிகளை இணைகிறாய்
வானத்தில் மின்னல் வெட்டுகிறது ..............
போட கோலத்தில் வர்ணம் தீட்டுகிறாய்
வானத்தில் வானவில் தெரிகிறது.................
உன்னால் தான் நான் மட்டும் அல்ல
இயற்க்கையும் இயங்குகிறது...........

Wednesday, April 23, 2008

அவள் கண்





புவிஈர்ப்பு விசையின்
மதிப்பு தெரியும்....
என் கண்மணியே
உன் விழி ஈர்ப்பு விசையின்
மதிப்பு என்ன ?????

Tuesday, April 22, 2008

நீ எந்த மாதத்தில் பிறந்தாய்




என்னவளே..........
நீ எந்த மாதத்தில் பிறந்தாய்

சித்திரையில் பிறந்தயா?
என் நித்திரையை கெடுக்கிறாய்..........

வைகாசியில் பிறந்தயா?
என்னை வசியம் செய்துவிடாய்..........

ஆனியில் பிறந்தயா?
என் நெஞ்சில் ஆணியாய் பதிந்துவிடாய்..........

ஆடியில் பிறந்தயா?
என்னை ஆட்டி படைக்கிறாய்..........
ஆவணியில் பிறந்தயா?
என் மனதில் உன் தாவணி கனவு வைகிறாய்..........

புரட்டசியில் பிறந்தயா?
என்னை உன் நினைவுகளில் புரட்டிஎடுகிறாய்..........

ஐப்பசியில் பிறந்தயா?
என் நெஞ்சில் அப்பி பதிந்துவிட்டாய்..........

கார்த்திகையில் பிறந்தயா?
என் கண்களுக்கு கார்த்திகை தீபமாய் தெரிகிறாய்..........

மார்கழியில் பிறந்தயா?
என் நினைவுகளுக்கு மார்கழி குளிராய் இருகிறாய்..........

தையில் பிறந்தயா?
என் இதயத்தில் குடியேறி விட்டாய்..........

மாசியில் பிறந்தயா?
என் மனதில் மங்கள இசையாய் ஒலிக்கிறாய்..........

பங்குனியில் பிறந்தயா?
என் உள்ளத்தில் உறைபனியாய் இருகிறாய்..........

Sunday, April 20, 2008

இதயம்......... நீ

எத்தனை நோய்கள் வந்தாளும்
எனக்கு மாரடைப்பு நோய்
மட்டும் வராது
என் இதயம் என்னிடம் இல்லை

எத்தனை நோய்கள் வந்தாளும்
எனக்கு மாரடைப்பு நோய்
மட்டும் வராது
இந்த இதயத்தில் நீ இருப்பதால்

Saturday, April 19, 2008

நீ........

உன் கூந்தலில் வைக்கும்
பூக்கள் மட்டும் வாடாமல் இருக்கிறதே....
உன் கூந்தல் என்ன குளிர்சாதனபெட்டியா?

Thursday, April 17, 2008

நீ........ நிலா


நிலாவில் உயிர் வாழமுடியாது
என்கிறார்கள் அறிஞர்கள்...
நம் திருமணம் நடந்தால்
நான் நிலாவோடு வாழ்வேன்

Tuesday, April 15, 2008

பிறை நிலா

வானத்தில் இன்று
மூன்றாம் பிறை.
உண்மையை சொல்.....
உன் நகத்தை கடித்து
துப்பியது நீ தானே!!!!!

Wednesday, April 9, 2008

நாங்களும் மனிதர்கள் தான்

சாப்ட்வேர் வல்லுந்ர்களே சபிகாதீர்கள்
நாங்களும் மனிதர்கள் தான்

நாங்கள் வாங்கும் முழுசம்பள பணத்திற்கும்
அரசிற்கு வரிகட்டுகிறோம்....
நாங்கள் மேசைக்கு கீழே கீம்பளம்
வாங்குவது கிடையாது.....

எங்கள் அலுவலகங்களில் அரசு அலுவலகங்கள் போல்
வேலை நேரபலகை இல்லை

இந்தியா வேலை அமைப்பு சட்டத்தின்
சாதி,மதம் என்னும் கட்டத்தை
எங்கள் அலுவலகங்களில் உபயோபடுத்துவது இல்லை

எங்களுக்கு வெயிலின் அருமை தெரியாது
ஆனால் மன அழுத்தத்தின் வலி தெரியும்

எங்களுக்கு சம்பளம் அதிகம் என்று எண்ணுகிறோர்கள்
ஆனால் உங்களை போல் சாகும்வரை
ஓய்வு ஊதியம் இல்லை

மற்ற துறைகளால் இந்தியனின் அறிவு மதிப்பு
அந்நியனுக்கு தெரிந்ததைவிட
எங்களால் தெரிந்தது அதிகம்

எங்கள் அருமை உங்களுக்கு தெரியவில்லை
உங்களின் பொறமைபிடித்த கண்களுக்கு
நாங்கள் அந்நிய அடிமைகள் என்று எண்ணலாம்

குழந்தையின் மழலை பேச்சு தாய்க்கு புரியாதது
குழந்தையின் குற்றம் இல்லை

Wednesday, March 26, 2008

தின காலண்டர்

தினசரி புத்தாடை
உடுத்தும் நாட்காட்டி

Tuesday, March 25, 2008

செய்திகள்


தலைப்பு செய்திகள்,
அரசியல் செய்திகள்,
மாநில செய்திகள்,
மாவட்ட செய்திகள்,
உலக செய்திகள் ,
வணிக செய்திகள் ,
விளையாட்டு செய்திகள் ,

அட இதிலும் இத்தனை சாதி பிரிவுகளா ???

காதலர்களே உஷார்...

சாதி,
மதம்,
பொருளாதாரம்,
சீர்வரிசை,
கெளரவம் என்னும்
ஐயம்புலன்கள் தான்
திருமணம் என்னும்
அமைச்சரவையில் முக்கிய இலக்காகள்

இவறறில் ஏதாவது ஒன்றிக்காக
உங்கள் காதல் தடைப்பட்டு
அது திருமணத்தில் முடியவில்லை என்றால்
அது கல்லறை திருமணம்தான்......

இந்தியா காதல் பூமீயாய் இருப்பதை
காதலர்கள் பூமீயாகவும் மாற்றுங்கள்.....
காதலர்களே உஷார்...

Monday, March 24, 2008

என்னுடைய கறுப்பு பெட்டி


Inbox :
உன்னுடைய மெயில் காக ஓவ்வொரு மணிதுளியும்
தன்னை ரேபிரேஷ் செய்த்து காத்துகிடகிறது

Starred:
உன்னுடைய பெயரில் வரும் அத்தனை
மெயில்களும் Starred கீரிடம் வைத்துள்ளன

Chats:
உன்னோடு Chat செய்த Chat மெயில்களின்
வரலாறு பட்டியல் இடபட்டுஉள்ளது

Sent Mail:
உனக்காக நான் அனுப்பிய மெயில்கள்
உன்னிடம் சென்று விட்ட அகந்தையால் என்னை பார்கின்றன

Drafts:
உனக்கு அனுப்ப விருக்கும் மெயில்கள்
வரிசையை காத்து நிற்கின்றன

All Mail:
இதற்கும் என்னுடைய இன்போக்ஸ்
வித்தியாசம் தெரியவில்லையடி

Spam:
உன் பெயரில் உன்னை தவிர எல்லாரும்
அனுப்பும் மெயில்கள் ஸ்பாமில் கூடு கட்டுகின்றன

Trash:
உன்னை தவிர மாற்ற எல்லோரும் அனுப்பிய மெயில்கள்

Friday, March 21, 2008

என்னவளே

என் உடலில் உள்ள மற்ற
உடல் பாகங்கள் எல்லாம் புலம்புகின்றன
அதிஷ்டம் இதயத்துக்கு மட்டும் எப்படி கிடைத்தது ?
********
பெண்னே...
மறக்காமல்
உன் வீட்டிற்கு சென்றஉடன்
உன்விரல்களை கழுவிவிடு
உன் கையில்
இரத்தகறை படிந்திவிடக் கூடும்

********
வருத்தம் இல்லையடி
கல்லறையில்லாவது
நிம்மதியாய்உறங்குவேன்
நானும் என் பிறவி பயனை
அடைந்துவிட்டேன் என்று

***********

உன் விட்டில் இருக்கும் ரோஜா செடிக்கு
தினமும் தண்ணிர் தெளிப்பது போல்...
கண்ணாடி தொட்டியில் இருக்கும்
வண்ண கலர் மீன்களை பார்ப்பது போல்...
தினமும் ஒரு முறையேனும்
இந்த இதயத்தை கையால் எடு

************
இதயத்தை பத்திரமாக வைத்திரு
மற்ற பெண்களிடம்
காண்பிக்கவேண்டாம்...
கண்டிப்பாக அபகரித்து விடுவார்கள்....

Wednesday, March 19, 2008

ஒரு தலை காதல்

சுவிங்கம் போன்ற என் மனதை
கண்கள் என்னும் வாயில் போட்டு
பார்வை என்னும் பல்லால் மென்று விட்டு
காதல் எனற போது துப்பி விட்டயடி

Saturday, March 15, 2008

என்னவள் என்பவள் யார்?

கடவுள் வாழ்த்து :
உன் பெயரோடு " துணை " என்று எழுதினால் அது கடவுள்வாழ்த்து

செய்யுள் : நீ செய்வதை சொன்னால் அது செய்யுள்

கவிதை : உன் பெயரை எழுதினால் அது கவிதை

கட்டுரை : உன்னை பற்றி எழுதும் அனைத்தும் கட்டுரை

இலக்கணம் : நீ பேசிய வார்த்தைகள் இலக்கணம்

இன்னிசைஅளபெடை: நீ சிந்தும் சிரிப்பு இன்னிசைஅளபெடை

உயிர் எழுத்து : நீ

மெய் எழுத்து : நான்

உயிர்மெய்எழுத்து : நம் காதல்

துணை எழுத்து : நம் குழந்தைகள்

ஆயுத எழுத்து : திசைக்கு ஒரு புறம் இருக்கும் நம் பெற்றோர்கள்

மனநிலை


மழைக்கு பின்பு புழுக்கமாய் இருந்தது
மண் வாசனை காற்றில் கரைந்து இருந்தது
நிறை வேற காதலின்
நினைவு சுமைகள் நெஞ்சில்
பாரமாய் இருந்தது

Friday, March 14, 2008

சரித்திரம்


லைலா - மஜுனு
அம்பிகாவதி - அமராவதி
ரோமியோ - ஜுலியட்
எப்படி சரித்திரத்தில் இடம் பிடித்தார்கள் ?
வாழ்ந்து அல்ல
காதலித்து தான் .......

முகப்பரு


என்னவளின் முகத்தில்
தேன் குடித்த
தேனீகள் சிந்திய
தேன் துளிகள்

காதல் குறள்

தீயினால் சுட்டபுண் உள்ளாரும் ஆறாத
உன் விழியினால் சுட்டவடு

Wednesday, March 12, 2008

செல்பேசி

எல்லாருடைய கையிளும்
அடிக்கடி சினுங்கும்
கை குழந்தை

பிரசவம்

மறுபிறவி எடுக்கும்
மங்கையின்
மறு அவதாரம்

Tuesday, March 11, 2008

இந்தியா


இந்தியாவில் ஒரு ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 48.75 $

பீகாரில் தெருவிற்கு தெரு ஏ.டி.எம் மையங்கள் திறப்பு

கர்நாடக உடனான காவேரி பிரச்சனையில் தமிழகத்துக்கு தாராளம்

இந்தியாவில் விமான தளங்கள் இல்லாத மாவட்டங்கள் இல்லை

இந்தியாவில் கணிபொறி இல்லாத வீடுகள் இல்லை

ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா முதல் இடம்

குஜராத்தில் மத கலவரம் இல்லை

இலங்கையில் இன கலவரம் இல்லை

காஷ்மீர் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது

நடத்து முடித்த தேர்தலில் நூறு சதவிகித வாக்குபதிவு

துண்டு விலாத பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்பணம்

உலக வல்லரசு வரிசையில் இந்தியா முதல் இடம்



காலை கதிரவன்
கண்ணில் முத்தம்மிட
கனவு கலைந்தது

Monday, March 10, 2008

என்னவளே நான் யார் ?


கண்கள் உண்டு ஆனால்
பார்க்கும் திறன் இல்லை ஆனால்
உன் கண்களாலே
என் கண்ணை காண்பாய் நீ

உன் மழலை பருவத்தில் நீ
உறங்குவதற்காக
உன் முத்தமழையில் மூழ்கி
நீச்சல் அடிக்கும் வீரன் - நான்


உன் பள்ளி பருவத்தில்
உன் பரம வைரிகளை பலி வாங்கவும்
உன்னை பாதுகாக்கும் வீரவாள் - நான்

உன் கரிசல் காட்டில் முளைக்கும்
பூச்சிகளை வதம் செய்யும்
பீரங்கி துப்பாக்கியாய் - நான்

உன் வாழ்க்கையில் நீ செய்யும்
சவால்களுக்கு கொடிமரம் - நான்
உன் நியாபக மரதிக்கு நானே
திகடட்டாத தீனி

உன் கோபத்திற்கு நானே
புகைவராத சிகரெட்

வெட்டினாலும் துப்பினாலும்
வளரும் அருகம்புல் செடி - நான்

உன் கல்லூரி காலத்திலே
வண்ணங்கள் பல தீட்டி நீ
கோலம் போடும்
உன் வீட்டு வாயில் - நான்

உன் சூட்டை தணிக்க வெள்ளை
ஆடை உடுத்தும் விதவை - நான்

என் மனதை அறிய திருவிழா
காலத்தில் - நீவைக்கும் மருதாணி
பரீட்சையில் - நான்முதல் மாணவன்.

உன் எண்ணங்களை
சிலைகளாய்செதுக்கும்
உழிக்கோ ஆணிவேர் - நான்

வேண்டாம் என்று நிராகரித்தாலும்
வளருவேன் என் காதல் போல்
என் வளர்ச்சி பொய்யான வளர்ச்சி
என்கிறது அறிவியல்

எத்தனை அறிஞர்கள்
என்னை அகழ்வாராய்ச்சிசெய்தாலும்
உன்னோடு பிறந்த
கவசகுண்டலம் - நான்

கலாச்சாரம் மாறினாலும்
புரட்சிகள் வெடித்தாலும்
பண்பாடு மாறாமல்
உன்னுடனே உடன்கட்டை
ஏறும்முரட்டு பக்தன் - நான்

என்றும் உன்.....
நகக்கன்னாய்....நான்.....

Sunday, March 9, 2008

அதிர்வுகள்


உன்னுடைய மெல்லிய
சிரிப்புக்குள்
எனக்குள்
மில்லியன் அதிர்வுகள்

கடல் சங்கு












கடல் சங்கை
காதில் வைத்தால்
கடல் ஓசையோடு
கடல் அலையின்
--- இரைச்சல் இருக்கும்






என்னுடைய செல்பேசியை
என் காதில் வைத்தால்
உன் குரலோடு
உன் சிரிப்பின்
---- இசை இருக்குதடி

Monday, March 3, 2008

இந்தியா ஒளிர்கிறது


இந்தியா ஒளிர்கிறது
கும்பகோணத்தில்
பள்ளி குழந்தைகள்
எரிந்த தீயில்


நாடாளும் மன்னர்களே
உங்களின் இல்லங்கள்
உங்கள் பினாமிகளின் இல்லங்கள்
பாராளுமன்ற கட்டிடங்கள்
சட்டசபை கட்டிடங்கள்
உங்களின் கட்சி அலுவலங்கள்
எல்லா வற்றிலும் கூரைபோடுங்கள்
இல்லையேனில்
பள்ளி கூடங்களின்
கூரையை மாற்றுங்கள்.

Wednesday, February 27, 2008

நிழல்


‍‍‍‍நிறவெற்றுமை
பார்க்காத‌
மனிதனின்
மறுபதிப்பு.

பேனா

மூவிரல்
நடுவே
சிலைகளை
செதுக்கும் ஊழி.

Tuesday, February 26, 2008

பார்வை




க‌ருவ‌றையில்
காத்த‌ அன்னையும்
ம‌ற‌க்க‌ வைத்து
க‌ல்ல‌றையில்
இத‌யம்க‌ருகும் வ‌ரை
க‌ன‌வுகாண‌ வைக்கும்
என்ன‌வ‌ளின் ஓர‌ப்பார்வை

Friday, February 22, 2008

கேள்வி-பதில்கள்

இவை அனைத்தும்

என் க‌ற்ப‌னை குதிரையின்

கால்சுவ‌டுக‌ள்

காத்துயிருக்கிறேன்

என் காதல் மனைவிக்காக...................






என்னுடைய‌ உள்ளங்கையில் எழுத சொன்னால்என்ன எழுதுவாய் என்று காதலியின் கேள்விக்குஎன்னுடைய பதில்கள்.






  1. ஓவிய‌த்தில்
    எப்ப‌டிய‌டி
    கிறுக்குவ‌து?

  2. பிர‌ம்ம‌னுக்கு
    மார்ட‌ன் ஆர்ட்
    வ‌ரைய‌ யார்
    க‌ற்றுகொடுத்தார்க‌ள்...

  3. உல‌க‌ம் உருண்டை
    என்றுஇருந்தேன் ‍‍‍‍‍‍‍‍‍
    ஆனால்அது ச‌துர‌ம‌டி.

  4. உன் கைரேகை
    பார்த்தேன்என்
    காத‌ல்ரேகை எங்கே?

  5. உன் உள்ள‌ங்கையின்இணைந்து
    இருக்கும் விர‌ல்க‌ளைபார்த்தேன் ...
    ந‌திநீர் இனைப்பு சாத்திய‌ம்டி....

  6. அணிலின் மீது
    ராம‌னின்விர‌ல்ரேகை ‍
    என்இத‌ய‌த்தில் உன்கைரேகை.

  7. உன் உள்ள‌ங்கையில் வைத்த‌
    பின்புதான் தெரிகிற‌து
    ம‌ருதாணியின் இன‌மே
    த‌ன் பிற‌வி ப‌ய‌னைஅடைந்துவிட்ட‌து என்று.

  8. உன் கைரேகையை
    வைத்துதானாஉல‌கில் உள்ள‌
    எல்லோருடைய‌ஜ‌த‌க‌த்தையும்
    க‌ணிக்கிறார்கள்.

  9. க‌ணிப்பொறி த‌ட்ட‌ச்சில்
    உள்ள‌ எழுத்துக்க‌ள்எல்லாம்
    ஏங்குகின்ற‌ன‌உன்
    உள்ள‌ங்கையால்
    முத்த‌ம் வாங்க‌.

  10. என் எண்ண‌த்தை
    பேனாவால் முத்த‌மிட‌வா?
    இல்லை
    உத‌ட்டால் எழுத‌வா?

  11. யார் சொன்னார்க‌ள்?
    எல்லா ம‌னித‌ர்க‌ளுக்கும்
    கைரேகைமாறுப‌டும் என்று
    என் கைரேகையும் இதுதானடி...

  12. நான் உல‌காலும் ம‌ன்ன‌ன்
    ஆனால்க‌ண்டிப்ப‌க
    உல‌க‌ வ‌ரைப‌ட‌த்ல்மாற்ற‌ம் இருக்கும‌டி.

  13. "உன்னுடைய‌ பெய‌ர்(.........) ம‌ணிகண்ட‌ பிர‌சாத்".