Saturday, March 15, 2008

என்னவள் என்பவள் யார்?

கடவுள் வாழ்த்து :
உன் பெயரோடு " துணை " என்று எழுதினால் அது கடவுள்வாழ்த்து

செய்யுள் : நீ செய்வதை சொன்னால் அது செய்யுள்

கவிதை : உன் பெயரை எழுதினால் அது கவிதை

கட்டுரை : உன்னை பற்றி எழுதும் அனைத்தும் கட்டுரை

இலக்கணம் : நீ பேசிய வார்த்தைகள் இலக்கணம்

இன்னிசைஅளபெடை: நீ சிந்தும் சிரிப்பு இன்னிசைஅளபெடை

உயிர் எழுத்து : நீ

மெய் எழுத்து : நான்

உயிர்மெய்எழுத்து : நம் காதல்

துணை எழுத்து : நம் குழந்தைகள்

ஆயுத எழுத்து : திசைக்கு ஒரு புறம் இருக்கும் நம் பெற்றோர்கள்

No comments: