Thursday, May 1, 2008

நீ கோலம் போடுகிறாய்

நீ உன்வீட்டு வாயிலின் தண்ணீர் தெளிக்கிறாய்
பூமி எங்கும் மழை பொழிகிறது .........
கோலம் போடுவதற்காக புள்ளி வைகிறாய்
வானம் எங்கும் நட்சத்திரம் மின்னுகிறது..........
வைத்த புள்ளிகளை இணைகிறாய்
வானத்தில் மின்னல் வெட்டுகிறது ..............
போட கோலத்தில் வர்ணம் தீட்டுகிறாய்
வானத்தில் வானவில் தெரிகிறது.................
உன்னால் தான் நான் மட்டும் அல்ல
இயற்க்கையும் இயங்குகிறது...........